வங்கியிலிருந்து 20 கிலோ நகை கொள்ளை.. போலீஸைப் பார்த்ததும் போட்டு விட்டு தப்பிய திருடன்!

கீரனூர் அருகே உள்ளது குளத்தூர் கிராமம். இங்கு சிட்டி யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் மேலாளராக அனுராதா என்பவர் உள்ளார். நேற்று வழக்கம் போல பணிகளை முடித்து விட்டு வங்கியை ஊழியர்கள் பூட்டி சென்றுள்ளனர். தினமும் இரவு நேரத்தில் இந்த வங்கியை போலீசார் கண்காணிப்பது வழக்கம்.
நேற்று போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், இளைஞர் பாதுகாப்பு படையை சேர்ந்த கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரமாக ஒரு வாலிபர் சாக்கு மூட்டையுடன் நின்றிருப்பதைப் பார்த்த ரோந்துப் படையினர் அவரிடம் சென்றனர். அதைப் பார்த்த அந்த நபர் தான் வைத்திருந்த மூட்டையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டார். அவரைப் போலீஸார் பிடிக்க முயன்றனர். ஆனால் இருளில் அந்த நபர் ஓடி விட்டார்.
இதையடுத்து அந்த மூட்டையைக் கைப்பற்றிய போலீஸார் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், புதுக்கோட்டை எஸ்.பி. உமா, டி.எஸ்.பி. ஆறுமுகம், கீரனூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மாத்தூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் வேலு சாமி உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது அதில் நகைகள் இருந்தன. அவை மொத்தம் 20 கிலோவுக்கும் கூடுதல் என்று தெரிகிறது. அதேபோல ஒரு அட்டைப் பெட்டியும் இருந்தது. அதிலும் நகைகள் இருந்தன. மொத்தமாக இவற்றின் மதிப்பு ரூ. 5 கோடி இருக்கலாம். இந்த நகைகளை, சிட்டி யூனியன் வங்கியிலிருந்து அந்த நபர் திருடியுள்ளார். ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து திருடியுள்ளார்.
வங்கி மேலாளர் அனுராதா வரவழைக்கப்பட்டு அவர் மூலம் வங்கியில் இருந்த நகைகள் எத்தனை என்பது குறித்து ஆராயப்பட்டது. அதில் அனைத்து நகைகளையும் அந்த மூட்டையில் போட்டு சுருட்டியுள்ளான் திருடன் என்பது தெரிய வந்தது.
ஒரு வங்கியின் அத்தனை நகைகளையும் சாக்குப் பையில் போட்டு திருடி வந்த திருடனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூட்டை பெரிதாக இருந்ததால்தான் அவனால் தூக்கிக் கொண்டு போக முடியாமல் போட்டு விட்டு தப்பியுள்ளான்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications