குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்.. அபாய ஒலி எழுப்பி மக்கள் வெளியேற்றம்
குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம்: ஆர்ப்பரித்து கொட்டி வரும் தண்ணீரால், குற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பரவலாக விழுந்த நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர்.

காலை 10 மணி முதல் மலை பகுதியில் மழையின் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது சிறிதாக அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய சங்கு ஒலிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் வெளியேற்றினர்.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. ஆனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கோவை குற்றால அருவிக்கு செல்ல வனத்துறை ஏழாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் மாநகரப் பகுதிகளில் மழை தற்போது குறைந்து உள்ளது . சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்னும் சில தினங்களில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications