ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவது தவறு - நீதிபதி சந்துரு கருத்து
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி விவகாரத்தில் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவது தவறானது என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
பொங்கல் புத்தகத் திருவிழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை புத்தகங்கள் இங்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற தினங்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

இந்த புத்தகத் திருவிழாவை, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தொடக்கி வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்துரு கூறுகையில், திறமையான சட்டம் இயற்றப்படுமானால், ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை சட்டப்பூர்வமாக நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உணர்வுபூர்வமாக இல்லாமல் சட்டப்பூர்மமாக முடிவு எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஒரு நாடகம் போல் உள்ளதாகவும் சந்துரு விமர்சித்துள்ளார். தேர்தலை மனதில் வைத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படுவது தவறு என்றும் அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications