நடுரோட்டில் தீப்பிடித்த பேருந்து – 43 பயணிகள் உயிர் தப்பினர்!
நெல்லை: நெல்லை கயத்தாறில் நடுரோட்டில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 43 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்தில் இருந்த உடைமைகள் எரிந்து நாசம் ஆனது.
கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அரசு விரைவு பேருந்து ஒன்று புறப்பட்டு நாகர்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 43 பயணிகள் இருந்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்த வர்க்கீஸ் பேருந்துசை ஓட்டி வந்தார்.

இந்த பேருந்து அதிகாலை 2.40 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே சென்று கொண்டு இருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது பேருந்துசில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த டிரைவர் வர்க்கீஸ் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பேருந்தினை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். பேருந்தின் இஞ்சின் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே டிரைவரும், கண்டக்டரும் பேருந்துசுக்குள் ஏறி அங்கு தூங்கிக் கொண்டு இருந்த பயணிகளை சத்தம் போட்டு தட்டி எழுப்பினர். "பேருந்து தீப்பிடித்து எரிகிறது, கீழே இறங்குங்கள்" என்று கூறினர். சத்தத்தை கேட்டதும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர்.
அப்போது தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது. பயணிகள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு, தப்பித்தால் போதும் என்று தங்களது பொருட்களை பேருந்திலேயே விட்டு, விட்டு அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடினர்.
ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்கினர். சிலர் பேருந்தின் ஜன்னல் வழியாக இறங்குவதற்கு கண்ணாடிகளை திறக்க முயன்றனர். ஆனால் கண்ணாடிகள் இறுகிய நிலையில் இருந்ததால் திறக்க முடியவில்லை.
பின்னர் வாசல் வழியாக இறங்கியபோது புகை மூட்டத்தால் சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆனாலும் பேருந்தில் இருந்த 43 பயணிகளும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. பேருந்துக்குள் இருந்த பணம் உள்ளிட்ட பயணிகளின் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசம் ஆனது.
நடுரோட்டில் பேருந்து எரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அப்போது பேருந்து முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது. பேருந்தில் வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தங்களது கண் முன்னால் உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்ததைப் பார்த்த பயணிகள் பரிதவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் தீப்பிடித்து எரிந்த பேருந்தினை அங்கு இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டு, வாகனங்களை அந்த வழியாக செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications