நெல்லை, தூத்துக்குடி புதிய மேயரை தேர்ந்தெடுக்க செப். 18 ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்
சென்னை: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் செப் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த விஜிலா சத்யானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலாபுஷ்பா இருவரும் கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் மேயர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் பதவி காலியாக இருந்தது அந்த இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தெடர்பாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் சங்கரன் கோவில், ராமநாதபுரம் நகராட்சிகள் உள்பட ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6.8.2014 முதல் துவங்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதிநாள் 13.8.2014 தேர்தல் 18.9.2014 அன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய செய்தி குறிப்பு தெரிவிக்கிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications