மயிலையில் பக்தர்கள் வெள்ளம்.. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடந்த கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கினர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா மார்ச் 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நாளை முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும், முருகவேள், நான்முகன், வேதம், சுக்கிரன், ராமர் வழிபட்டு பேறு பெற்ற கோவில் மயிலாப்பூர் கற்பகம்மாள் உடனாகிய கபாலீசுவரர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

மார்ச் 14 முதல்

மார்ச் 14 முதல்

நடப்பாண்டு 10 நாள் பங்குனி பெருவிழா, மார்ச் 14ம் தேதி கிராம தேவதை பூஜையுடன் ஆரம்பமானது. இன்று தேரோட்டம் நடைபெற்றது.

கோலாலகமான தேரோட்டம்

கோலாலகமான தேரோட்டம்

இன்று காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், தேரோட்டம் நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கி அருள் பெற்றனர்.

நாளை அறுபத்து மூவர் திருவிழா

நாளை அறுபத்து மூவர் திருவிழா

21ம் தேதி நாளை பகல் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவனும், 63 நாயன்மார்கள் திருக்காட்சியும் நடக்கிறது.

23ம் தேதி திருக்கல்யாணம்

23ம் தேதி திருக்கல்யாணம்

22ம் தேதி மாலை 6.30 மணிக்கு இறைவன் பிச்சாடனார் கோல விழா மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது. தொடர்ந்து 23ம்தேதி இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு 8.45 மணிக்கு கொடியிறக்கம், சண்டேசுவரர் விழாவும் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+