மார்ச் 12 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்... சிபிஎஸ்இ அறிவிப்பு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 நாட்களுக்கு சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.
டெல்லி : மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நீதிமன்றத்தை நாடிய போதும் அதற்கு பயனில்லை. குறிப்பாக தமிழக அரசு நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறிய போது எந்த கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.

சிபிஎஸ்இ என்று சொல்லப்படும் மத்திய அரசின் கல்வி வாரியம் நடத்தும் இந்த நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலேயே அமைவதால் சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் பயிலாத மாணவர்களுக்கு சிரமமமாக இருக்கும் என்பதாலேயே கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் நீட் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
மே மாதத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணவர்கள் அளிக்க நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications