நீட் தேர்வில் தமிழ் மொழிக் கேள்விகள் கடினமா?... ஹைகோர்ட் கிளையில் சிபிஎஸ்இ பதில்மனு!
நீட் தேர்வின் போது தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் கடினமாக இருந்நது எனக் கூறுவதை ஏற்க முடியாது என்று சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபா மற்றும் திருச்சியை சேர்ந்த மாணவி சக்தி மலர்க்கொடி இருவரும் நீட் தேர்வுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர். திருச்சியை சேர்ந்த சக்தி மலர்கொடி என்பவர் கடந்த 24ம் தேதி நீட் தேர்வு முடிவுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆங்கில மொழி வினாத்தாள் தவிர குஜராத்தி, இந்தி, மராத்தியில் மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்தததாக புதுக்கோட்டை மாணவி தனது மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் மே மாதம் 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தர வரிசை சீராக இருக்காது என்பதால் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
— Manoj Prabakar S (@imanojprabakar) June 6, 2017 |
பதிலளிக்க உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அங்கீகரிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பாளர் மூலம் குஜராத்தி,இந்தி,மராத்தி வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும் நீட் தேர்வு குறித்து எழுந்துள்ள புகார்களுக்கு சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

கேள்விகள் கடினமா?
இதனையடுத்து இன்று சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் கேட்கப்பட்ட கேள்வித் தாள் மட்டுமே கடினமாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.

2 வினாத்தாள் தயாரிப்பு
8 பிராந்திய மொழிகளில் 2 செட் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதாகவும், ஏதேனும் ஒரு வினாத்தாள் கசிந்துவிட்டால் அதனை சமாளிப்பதற்காகவே 2 வினாத்தாள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு எதிர்ப்பு
இதே போன்று நீட் வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் அரசு எப்போதும் நீட் தேர்வை ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளது. மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வுக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இரு தரப்பு பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications