சென்னை கட்டட விபத்து– அடுத்தடுத்து மீட்கப்படும் உடல்கள் - பலி 47 ஆக உயர்வு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து உடல்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தொடர்ந்து 5வது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. துணை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கமாண்டோ படை வீரர்கள், சென்னை மாநகர போலீசார், தீயணைப்பு படையினர், மெட்ரோ ரயில் ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2200 பேர் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கான்கிரீட் தளங்களை துளையிட்டு உடைத்து அகற்றி உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகல் நிலவரப்படி 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணியில், இதுவரை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 11 பேரும், தமிழகத்தை சேர்ந்த 5 பேரும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் 21 சடலங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு அடையாளம் தெரியாமல் உள்ளன.
மீட்பு பணியின்போது நேற்று மதியம் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்து உயிருக்கு போராடிய நிலையில் வாலிபர் ஒருவர் மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக மீட்பு குழுவினர் அவருக்கு திரவ வடிவிலான குளுக்கோஸ் கொடுத்தனர்.
எனினும் மீட்பு குழுவினரால் அவரை உனடியாக மீட்க முடியவில்லை. அவரை உயிருடன் மீட்பதற்காக மீட்பு குழுவினர் மிகுந்த கவனத்துடனும், பொறுமையாகவும் இடிபாடுகளை அகற்றினர்.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மாலை 5 மணி அளவில் அவர் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த விகாஷ் (23) என்பது தெரியவந்தது.
கட்டடம் இடிந்து விழுந்து 72 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பின் மீட்டெடுக்கப்பட்ட விகாஷ் இடிபாடுகளிலிருந்து வெளியே வந்த உடன் தண்ணீர் அருந்தினார்.
இது மீட்பு குழுவினருக்கும், சுற்றி பார்வையிட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வியப்புடன் கூடிய மகிழ்ச்சியை அளித்தது. உடனடியாக மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து உடல்நிலையை தேற்றினர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications