சென்னையில் இன்றும் மழை.. பல பகுதிகளில் ஜில் ஜில் காற்று
சென்னை: சென்னை நகரில் நேற்று இரவு பலத்த மழை பெய்த நிலையில் இன்றும் நகரின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.
கடந்த பல நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பம் தற்போது சென்னையில் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் குறைந்தும் காற்று பலமாக வீசியபடியும் உள்ளன. அவ்வப்போது சிறு சிறு தூறல் காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு வாக்கில் சென்னை நகரையும், புறநகர்களையும் பலத்த மழை தாலாட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், முகப்பேர், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொஞ்ச நஞ்ச புழுக்கமும் குறைந்து போனது.
அதேசமயம், புறநகர்களில் மாலை 4 மணிவரை லேசான வெயில் அடித்தது. காற்று வீசிக் கொண்டிருந்தது. இங்கும் மழைக்கான அறிகுறிகள் சிறப்பாக உள்ளதால் புறநகர்ப் பகுதி மக்களும் மழையை எதிர்பார்த்து ஆவலோடு உள்ளனர்.












Click it and Unblock the Notifications