மவுசு போச்சு: காத்து வாங்கும் சென்னை மெட்ரோ ரயில்கள்
சென்னை: துவங்கப்பட்ட 4 மாதத்திற்குள் சென்னை மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
பெரும் ஆரவாரத்தோடு தொடங்கப்பட்ட இந்தப் போக்குவரத்துக்கு மக்கள் மத்தியில் மவுசு குறைந்து விட்டதாகவே தெரிகிறது.
ஆரம்பத்தில் இருந்த கூட்டம், அலை மோதல் இப்போது இல்லை. படிப்படியாககுறைந்து போய் விட்டது.

மக்கள் எதிர்பார்ப்பு
சென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி துவங்கி வைத்தார்.

கோயம்பேடு டூ ஆலந்தூர்
கோயம்பேடு-ஆலந்தூர் இடையே தினமும் காலை 9 மணி முதல் இரவு 9.40 மணி வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அதே போன்று ஆலந்தூர்-கோயம்பேடு இடையே காலை 6.03 மணி முதல் இரவு 10.03 மணி வரை 97 முறை மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது.

போட்டி போட்டுக் கொண்டு வேடிக்கை
மெட்ரோ ரயில் சேவை துவங்கிய புதிதில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அதில் பயணம் செய்தனர். ஆனால் மெட்ரோ ரயில் டிக்கெட் விலை அதிகமாக உள்ளதால் மக்கள் பழையபடி பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களை தேடிச் சென்றுள்ளனர்.

கூட்டம் இல்லை
இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டமே இல்லாமல் உள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னையை சுற்றிப் பார்க்க வருபவர்கள் தான் தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

கட்டணம் குறைந்தால் நல்லது
மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். மேலும் இந்த ரயில் பாதை மேலும் நீட்டிக்கப்படும்போது மக்கள் கூட்டம் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications