சென்னையில் சைரன் வைத்த காரில் சென்ற போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: உடனிருந்த துணை நடிகை தப்பியோட்டம்
சென்னை: ராஜிவ் காந்தி சாலையில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டபோது அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என தெரியவந்தது. காரில் அவருடன் இருந்த துணை நடிகை தப்பியோடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜிவ் காந்தி சாலையின், பெருங்குடி சுங்கச்சாவடி அருகே துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார், வழக்கம்போல நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோழிங்கநல்லூரிலிருந்து சென்னையை நோக்கி சைரன் வைக்கப்பட்ட கார் ஒன்று, நம்பர் பிளேட் இல்லாமல் தாறுமாறாக வந்துகொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனால், போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.
போலீசாரை பார்த்ததுமே, கார் மேலும் தாறுமாறாக தடுமாறி, சாலை தடுப்புகள் மீது மோதி நின்றது. அதிலிருந்து காரை ஓட்டி வந்த நபர் போதையில், தள்ளாடியபடி இறங்கினார்.
அந்த நபரிடம் விசாரித்தபோது, தன்னை கார்த்திகேயன் (30) என்றும், தான் கோவையை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், காரில் தன்னுடன் அமர்ந்துள்ள பெண் தனது மனைவி, அவர் கேரள ஆளுநரின் மகள் என்றும் கூறி உள்ளார்.
அவரது பேச்சிலும், நடத்தையிலும் சந்தேகம் அடைந்த போலீசார் கோவை காவல் நிலையத்திற்கு, அவரது போட்டோவை அனுப்பி வைத்து, விவரம் கேட்டுள்ளார். அவர்கள், கார்த்திகேயன் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். சிக்கிக்கொள்வோம் என தெரிந்ததும், காரில் இருந்த பெண் இறங்கி தப்பி ஓடினார்.
இதையடுத்து துரைப்பாக்கம் போலீசிடம் கார்த்திகேயன் ஒப்படைக்கப்பட்டார். தீவிர விசாரணையில் அவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பதும், அவருடன் வந்த பெண் துணை நடிகை என்றும் தெரியவந்தது. தப்பி ஓடிய துணை நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications