சென்னை சில்க்ஸ் 27 மணிநேரமாக கொழுந்துவிட்டெரியும் தீ.... கட்டிடம் இடிக்கப்படுகிறது? - வீடியோ
சென்னை சில்க்ஸில் 27 மணி நேரத்துக்கும் மேலாக தீ பற்றி எரிவதால் கட்டிடத்தை இடிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: சென்னை. தி.நகரிலிருக்கும் சென்னை சில்க்ஸ் கடையில் 24 மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க 150க்கும் மேற்படட் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து தீ எரிந்து வருவதால் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தி.நகரில் நேற்று அதிகாலை 4 மணியளவில் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பற்றிய தீ, அருகில் இருந்த சென்னை சில்க்ஸ் கடைக்கும் பற்றியுள்ளது. அப்போதிலிருந்து 27 மணி நேரமாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. புகை அந்த பகுதி முழுவதும் பரவி வருகிறது.
சென்னை சில்க்ஸ் 7 மாடிக் கட்டிடம் என்பதால் தரைதளத்திலிருந்து ஒவ்வொரு மாடியாக தீ பரவிவருகிறது. அங்கு கட்டிடங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இருப்பதால் தீயை அணைப்பதும் கடினமாக உள்ளது.
நேற்று தீயணைப்புத் துறைக்கு தகவல்தெரிவிக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளும் 150 தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் 27 மணிநேரத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் துணிக்கடை என்பதால் அவர்களால் தீயை உடனே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
சென்னை சில்க்ஸ்ஸின் 7 மாடிக் கட்டடிடத்தில் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் கட்ட்டிடம் பலமிழந்து வருகிறது. ஆகையால் அங்கு அலங்காரத்துக்காக பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி சுவர்கள் உடைந்து சிதறி வருகிறது. மேலும் நெருப்பின் சூடு தாளாமல் கடையின் நான்காம் மாடியின் முன்பக்க சுவர் இடிந்துவிழுந்துள்ளது. மேலும் புகையை வெளியேற்ற பின்பக்க சுவரை தீயணைப்பு வீரர்கள் உடைத்தனர்.
10க்கும் மேறபட்ட தீயணைப்பு வண்டிகள், 150 வீரர்கள் தொடர்ந்து போராடியும் நெருப்பை அணைக்க முடியவில்லை. ராட்சத வண்டிகளைக் கொண்டு வந்து தண்ணீரை 7 ஆவது மாடியில் பீய்ச்சி அடித்தாலும் இப்போது வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தீயணைப்புத் துறை வீரர்கள் கூறியுள்ளனர். கட்டுக்கடங்காமல் வெளியேறும் புகையை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் தடுமாறுகின்றனர்.
இந்த பெரிய தீ விபத்து, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடபப்பதால், பொதுமக்களுக்கு எந்த ஊறும் நடந்துவிடக் கூடாது என அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
நேற்று காலையிலிருந்து தீ எரிந்து வருவதால், பாதிக் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. மேலும் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதால், சென்னை சில்க்ஸின் மொத்த கட்டிடத்தையும் இடிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications