கைவிட்ட காதலி… போலீஸ் நிலையம் முன் தூக்கில் தொங்கிய சென்னை வாலிபர்
சென்னை: காதலித்த பெண் தன்னை விட்டு விட்டு பெற்றோருடன் சென்றதால் விரக்தியடைந்த வாலிபர் ஒருவர் யானைக்கவுனி போலீஸ் நிலையத்திற்கு எதிரிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் யாகூப்,32. இவர் சென்னை சௌகார்பேட்டை பெருமாள் கோயில் தோட்டம் 11ஆவது தெருவில் வசிக்கும் மைத்துனர் ஷேக்தாவூத் வீட்டில் வசித்து வந்தார். மேலும் ஷேக்தாவூத் சௌகார்பேட்டை அண்ணா தெருவில் வைத்திருக்கும் செல்போன் கடையில் யாகூப் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் யாகூப்பும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை, யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் இருவரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே இருவரையும் போலீஸார் திருப்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர். யானைக்கவுனி காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், யாகூப் காதலித்த பெண் தனது பெற்றோருடன் செல்வதாகக் கூறி, அவர்களுடன் சென்று விட்டார். இதைக் கேட்டு யாகூப் அதிர்ச்சியடைந்தார். அதேநேரத்தில் யாகூப் குடும்பத்தினரும், உறவினர்களும், கடுமையாக அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த யாகூப் சோகத்துடனேயே, காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் மாலையில் அந்தக் காவல் நிலையம், அருகே உள்ள மாநகராட்சி மைதானத்துக்குச் சென்ற யாகூப், அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த யானைக்கவுனி போலீஸார், யாகூப் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலித்த பெண் கைவிட்டு சென்றதால் இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications