சிலரின் தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.. வேதனை அடைந்துள்ளேன்.. மனம் திறந்த எடப்பாடியார்!
சிலர் செய்த தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: சிலர் செய்த தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அவர் மனம் திறந்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் பென்டிரைவ்கள், லேப்டாப்கள், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோவிலாக பார்க்கும் அதிமுகவினர் இடையே இந்த சோதனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சசியும் தினகரனும்தான் காரணம்
போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு சசிகலாவும் தினகரனும்தான் காரணம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனில் தங்கியிருந்தது தான் ரெய்டுக்கு காரணம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மனம் திறந்த முதல்வர்
போயஸ்கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதற்காக போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும் என்றார். சிலர் செய்த தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மனவேதனை அடைந்துள்ளேன்
இதனால் தான் மனவேதனை அடைந்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். வரி ஏய்ப்பு செய்தவர்களாலேயே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் ரெய்டு நடைபெற்றது.

கோவிலாக பார்த்த ஜெ. வீடு
இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றார். தாங்கள் கோயிலாக பார்த்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் சோதனை நடந்திருப்பது வேதனையை தருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications