ஜல்லிக்கட்டு போராட்டம் - காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தை எழுப்பியதால் பிரச்சனை- ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஓசாமா பின்லேடன் படத்துடன் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை சமூக விரோதிகள் திசை மாற்றினர். காவிரி முல்லைபெரியாறு பிரச்சினை தொடர்பாகவும் முழக்கமிட்டனர் என்றும் சட்டசபையில் ஒ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஜனவரி 16ஆம் தேதி முதல் அலங்காநல்லூர் தொடங்கி சென்னை மெரீனா கடற்கரை வரை ஒரு வாரம் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 23ஆம் தேதியன்று மாணவர்கள், இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

CM speaks on why police acted against Jallikattu protesters in Chennai Marina

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப்பின்னர் இன்றுசட்டசபை கூடியது. இந்த நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய ஏன் என்று திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் இன்று கேள்வி எழுப்பினார். சென்னை வன்முறை குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனையடுத்து சட்டசபையில் பேசிய முதல்வர், அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்த பின்னரே கைது செய்யப்பட்டனர்.

திமுக ஆட்சியில் இருந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் இருந்து பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை சமூக விரோதிகள் திசை மாற்றினர். காவிரி முல்லைபெரியாறு பிரச்சினை தொடர்பாகவும் முழக்கமிட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்துடன் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். இந்த போட்டோ ஆதாரங்கள் சட்டசபை சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

அமைதியான போராட்டத்தில் கடைசி இரண்டு நாட்கள் சமூக விரோத கும்பல் ஊடுருவி திசை திருப்பியது. இதனயைடுத்தே போராட்டக்காரர்கள் கடற்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மெரீனா கடற்கரை செல்லும் சாலைகள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. தடுப்பு வேலியை தாண்டியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. 60க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இதன் பின்னரே தடியடி நடத்தப்பட்டது என்று சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+