தமிழகத்தில் காங். ஆட்சி மலர பாடுபட வேண்டுமாம்... குஷ்புவின் 'அடடே' பேச்சு
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி மலர பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தளராத நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.
நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசியதாவது:
கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் பண பலத்தால் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்சி செய்யவில்லை. அதனால் காங்கிரசுக்கு அந்த மாநிலத்தில் தோல்வி கிடையாது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக மிக பெரிய கனவில் உள்ளது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவோம் என ராகுலும், சோனியா காந்தியும் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையின் படி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு குஷ்பு ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications