ரேஷன் கடையில் மளிகைப் பொருளை வாங்க வற்புறுத்தலாமா?.. கொந்தளிக்கும் நுகர்வோர்!
ரேஷன் கடைகளில் எந்தெந்த பொருட்களை வாங்குவது என்பதை தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கே உள்ளது, இதை கட்டாயம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ரேஷன் கடைகளில் விற்கப்படும் மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க வைக்கக் கூடாது என்று நுகர்வோர் கொந்தளிக்கின்றனர்.
தமிழகத்தில் இயங்கும் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெய்ணெய் உள்ளிட்டவை கட்டுப்பாட்டுப் பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது, இவற்றை ஏழை மக்கள் வாங்கிச் சென்று பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் கட்டுப்பாடற்ற பிரிவில் மளிகைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
அதாவது டீதூள், மஞ்சள் தூள், ரசப்பொடி, உப்பு உள்ளிட்டவையும் விற்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் இந்த பொருட்கள் விருப்பத்தின் பேரில் மக்கள் வாங்கிச் செல்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டது.

தரமற்ற சாமான்கள்
ஆனால் அவை தரமற்றதாக இருப்பதால் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் அதிகாரிகள் நெருக்கடியால் ஊழியர்கள் அவற்றை நுகர்வோரிடம் வற்புறுத்தி விற்கின்றனர்.

சுற்றறிக்கை அனுப்பியும்
இந்நிலையில் ரேஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறையி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த சுற்றறிக்கை இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிர்பப்படுத்தக் கூடாது
இதனிடையே ஒரு பொருளை வாங்க வேண்டுமா வேண்டாமா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்கக் கூடாது. நுகர்வோர் விருப்பப்பட்டால் மட்டுமே அவற்றை வாங்க முடியும் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு கெடுபிடி காட்டுவது ஏற்புடையதல்ல என்று நுகர்வோர் கொந்தளிக்கின்றனர்.

எங்கே கேட்கிறார்கள்
ஆனால் எல்லா ரேஷன் கடைகளிலும் அதை வாங்கு இதை வாங்கு என்று நிர்ப்பந்திக்கும் ஊழியர்களைத்தான் மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. முடியாது என்றால் வாக்குவாதம்தான் வெடிக்கிறது.
ஒட்டுமொத்தமாக மாற்றம் வர வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications