தக்கோலம் காவலர் கொலை: தேமுதிக பெண் கவுன்சிலர் மகன் கைது
வேலூர்: அரக்கோணம் அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தே.மு.தி.க. கவுன்சிலர் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் காவல் நிலையத்திற்கு நேற்று காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார். மறுமுனையில் பேசியவர், "தக்கோலம் அருகே புரசை ஆற்று பகுதியில் மணல் அள்ளியவாறு ஒரு டிராக்டர் உள்ளது. விரைந்து சென்றால் அதனை பிடிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்நது சப்-இன்ஸ்பெக்டர் ராஜனும், தலைமைக் காவலர் கனகராஜும் இரு சக்கர வாகனத்தில் புரசை ஆற்றுக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு ஒரு டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு இருப்பதை பார்த்த அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு டிராக்டரை பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
தப்ப முயற்சி
காவலர்கள் வருவதை பார்த்த டிரைவர் டிராக்டருடன் தப்ப முயன்றுள்ளார். அப்போது காவலர் கனகராஜ், டிராக்டரை நிறுத்து, நிறுத்து என்று கூறியவாறு டிராக்டரை நெருங்கியபோது டிரைவரின் சட்டையை பிடித்து டிராக்டரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
காவலர் கனகராஜ் மரணம்
அப்போது, டிராக்டரை நிறுத்துவதாக கூறிய டிரைவர் நிறுத்தாமல் திடீரென்று டிராக்டரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது டிராக்டரின் பின்னால் உள்ள டிரைலர், காவலர் கனகராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கனகராஜ் மீது டிராக்டரின் டிரைலர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். உடனே டிராக்டரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் பிடிக்க முயன்றார். ஆனால் டிராக்டர் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது.இது தொடர்பாக தக்கோலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பெண் கவுன்சிலர் மகன்
காவலர் மீது டிராக்டரை ஏற்றி கொன்று விட்டு டிராக்டருடன் தப்பி சென்றவர் தக்கோலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் சுரேஷ் என்பது தெரியவந்தது. தேவராஜின் மனைவி செண்பகவல்லி தக்கோலம் பேரூராட்சி 6வது வார்டு தே.மு.தி.க. கவுன்சிலராக உள்ளார்.
கைது செய்த போலீஸ்
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுரேஷை காட்பாடி அருகே திருவலத்தில் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், டிராக்டரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications