குற்றாலம் சித்திர சபையில் 600 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் துணைகோயிலான சித்திர சபையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா திங்கட்கிழமை செப்டம்பர் 16ம் தேதி நடைபெறுகிறது.
பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திர சபையில் சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
குற்றாலநாதர் கோயிலின் துணை கோயிலாக சித்திர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலிகை ஓவியங்களுக்கு பல ஆண்டுகளுக்கு பின்பு மூலிகைகளால் வர்ணம் தீட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி உபயதாரர்கள் பணியாக சுமார் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஓவியங்களில் மூலிகை வர்ணம் பூசப்பட்டது.

பஞ்ச சபை
ஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர சபையும் ஓன்று. சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வரப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஓவியங்கள் மெருகூட்டப்பட்ட நிலையில் தற்போது சித்திர சபை வண்ணமிகு ஓவியங்களால் பளிச்சென பக்தர்களுக்கு காட்சி அளித்த வண்ணம் உள்ளது.

புத்துயிர் பெற்ற ஓவியங்கள்
இந்த ஓவியங்களில் நடராஜபெருமான், மதுரை மீனாட்சி கல்யாண வைபவம், முருகரின் அவதாரங்கள், பத்மநாதசுவாமி, எட்டு அவதாரங்களில் துர்க்கை மற்றும் பைரவ சுவாமிகள், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சித்திரங்கள் பளிச்சென காணப்படுகின்றன.

தீர்த்தம் எடுத்தல்
சித்திர சபையில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (15ம் தேதி) காலை 5 மணிக்கு அனுக்ஞை, மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு தீர்த்த சங்கரகர்ணம் குற்றால அருவியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.

திருக்குட நன்னீராட்டு விழா
கும்பாபிஷேக நாளான நாளை 16ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம்புறப்படுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் சித்திர சபை விமானம் மற்றும் மூலவர் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.

அமைச்சர்கள் பங்கேற்பு
மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் கண்ணன், ஆணையர் தனபால், தென்காசி எம்.பி., லிங்கம், எம்.எல்.ஏ., சரத்குமார், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ராஜா, இணை ஆணையர் கவிதா, உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications