ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடிக்கு திடீர் ஆதரவு.. வைகோ மீது முத்தரசன் சாடல்
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதற்கு கூடுதல் எடுத்துக் காட்டாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக சாடியிருக்கிறார்.
இம்மாதம் 8-ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இருப்பினும், இந்த அறிவிப்பினால் ஏழை-எளிய மக்கள் அன்றாடம் வங்கிகளில் காத்துக்கிடக்கும் அவலம் எழுந்துள்ளது என்றும், அப்பாவி மக்கள் செத்து மடிந்து வருவதாகவும் கூறி இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் யாரும் இந்த அறிவிப்பினால் கவலைப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார எனறார். இருப்பினும், யாரைக் குறிவைத்து இந்த திட்டத்தை அறிவித்தாரோ அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் சொத்துக்களாகவும், தங்க நகைகளாகவும் அவற்றை பதுக்கி விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
எனவே, இந்த நடவடிக்கையால் அப்பாவி மக்கள் தான் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்றார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ ஆதரவு அளிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முத்தரசன், ரூபாய் நோட்டு பிரச்னையில் பிரதமர் மோடிக்கு வைகோ ஆதரவு அளித்தால் 7 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களை விடுவிக்கும் செயலுக்கும் வைகோ துணை போவதாகவே அர்த்தம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ரூபாய் நோட்டு பிரச்னையில் மோடிக்கு ஆதரவாக அவர் ஏன் செயல்படுகிறார் என்பது குறித்து வைகோதான் பதில் அளிக்க வேண்டும் எனவும் முத்தரசன் கூறினார். பாரதிய ஜனதா தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ரூபாய் நோட்டு பிரச்னையில் அரசுக்கு எதிராகவே செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவில்லை. மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சிகளான மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்,சிபிஐ ஆகிய கட்சிகள் திங்கள் கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
எதிர்க்கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியின் பிற கட்சிகள் பங்கேற்ற நிலையில் மதிமுக பங்கேற்காதது அதன் கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக சிபிஐ மாநிலச் செயலாளரான முத்தரசன் கருத்து தெரிவித்திருப்பது அந்தக் கூட்டணிக் கட்சிகளிடையே மேலும் சர்சசையை உண்டாக்கி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications