தமிழக உரிமைகளை பறிக்கும் பாஜகவை கண்டித்து.. 6 குழுக்கள் 1000 இடங்களில் பிரச்சாரம்.. சிபிஐ அறிவிப்பு
தமிழகத்தின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் பாஜகவை கண்டித்து தமிழகம் முழுவதும் 6 குழுக்கள் 1000 இடங்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் அறிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள், தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிபிஐ சார்ப்பில் பிரச்சாரக் கூட்டம் வரும் 29ம் தேதி தொடங்க உள்ளதாக சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: மத்திய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள், மதச்சார்பற்ற நிலைக்கு எதிரான நடவடிக்கைகள், தமிழ்நாட்டிற்கான உரிமைகளை தட்டிப்பறிப்பது ஆகியவை கண்டிக்கத்தக்கது.
அதே போல தமிழக அரசும் தனது உரிமையை பாதுகாப்பதற்கு பதிலாக மத்திய அரசை போட்டிப் போட்டுக் கொண்டு ஆதரிக்கிறது. எனவே, இந்த இரண்டு அரசுகளையும் கண்டித்தும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.

29ம் தேதி பிரச்சாரம் தொடக்கம்
இந்தப் பிரச்சார இயக்கம் தமிழ் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி 6 குழுக்கள் 6 இடங்களில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறது.

1000 இடங்களில் பிரச்சாரம்
கன்னியாகுமரி, விருதுநகர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய 6 இடங்களில் இருந்து பிரச்சாரக் கூட்டம் தொடங்கப்படும். அங்கிருந்து தமிழகம் முழுவதும் சுமார் 1000 இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவில் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

ஜூலை 5ல் நிறைவு
இந்தப் பிரச்சாரப் பயணம் இறுதியாக ஜூலை 5ம் தேதி திருச்சியை வந்தடையும். அங்கு பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, டி. ராஜா, தா. பாண்டியன், நல்லக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

விவசாயிகளுக்கான மறியல் தர்ணா
இது தவிர ஜூலை 24, 25, 26 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் மறியல் தர்ணா போராட்டங்கள் நடத்தப்படும். விவசாயிகளின் பிரச்சனையில் மத்திய அரசு கவன செலுத்தவில்லை. விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை ரத்து செய்யவில்லை. நிவாரணம் வழங்க வில்லை. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது என்ற முத்தரசன் கூறினார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications