சென்னையை சூறையாடிய வர்தா புயல்- 1000 மரங்கள் விழுந்தன- பேருந்து கண்ணாடிகள் நொறுங்கின
வர்தா புயலின் கோரத்தாண்டவத்தை தாக்கு பிடிக்க முடியாமல் சென்னையில் 1000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன. பேருந்து கண்ணாடிகள் நொறுங்கின.
சென்னை: வங்கக் கடலில் உருவான வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்தில் சென்னையும், புறநகரும் சிக்கி சின்னாபின்னமானது. பேயாட்டம் போட்ட மரங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாதல் முறிந்து விழுந்தன.
சென்னையில் இதுவரை பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

இதுவரை பல மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் பலமாக உள்ளதால் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காற்றுடன் கொட்டி வரும் கனமழையால் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் வருகை இன்று மிகவும் குறைந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் புயல் காற்றினால் முறிந்துவிழுந்துள்ளன.

நீதிமன்றத்தில் இருக்கும் பணியாளர்கள் மற்ற யாரும் பணிக்கு வரவேண்டாம் என்று எச்சரித்து வருகிறார்கள். இதனால், நீதிமன்ற அலுவல்கள் முடங்கியுள்ளன.
மணிக்கு 140 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் மின்கம்பங்களும், மரங்களும் ஆங்காங்கே சாய்ந்துள்ளன. பேருந்துகளில் கண்ணாடிகள் விழுந்து நொறுங்கின. காற்று பலமாக வீசுவதாலும், கனமழை கொட்டி வருவதாலும் 4 மணிவரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications