தனிக்கட்சி தொடங்கி அதிமுகவை எதிர்க்க திட்டம்? தீபா சூசக தகவல்
ஜனவரி 17ம் தேதிக்கு பிறகு, மக்களிடம் முடிவை கேட்டறிந்துவிட்டு, தனிக்கட்சி தொடங்க தீபா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனிக்கட்சி தொடங்க உள்ளதாக மறைமுகமாக தெரிவித்தார்.
சென்னை, தி.நகரிலுள்ள தீபா வீட்டின் முன்பு இன்றும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்து கோஷமிட்டனர்.

அவர்கள் மத்தியில், தீபா உரையாற்றினார். இதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு தினத்திற்கு பிறகு நான் புதிய முடிவை அறிவிக்க உள்ளேன். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து அதிமுக தொண்டர்களின் கருத்துக்களை கேட்க உள்ளேன். அதன் பிறகு எனது அரசியல் பிரவேசம் இருக்கும்.
மக்கள் என்னை தேடி தேடி வருவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மக்கள் வருகையை தடுக்க முயல்வதும், எனது பேனர், போஸ்டர்களை அகற்றுவதும் தேவையற்ற வேலை.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த இடத்தில் சசிகலாவை வைத்து பார்க்க அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் என்னை தேடி வருகிறார்கள். சசிகலாவுடன் இணைந்து நான் செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நானும் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் மக்கள் உங்களை அத்தொகுதியில் போட்டியிட அழைக்கிறார்களே என்ற நிருபர்கள் கேள்விக்கு, மக்களிடம் நானே நேரடியாக பேசிவிட்டு அதுகுறித்து முடிவை அறிவிக்கிறேன் என்றார். இதனிடையே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கும், ஜனவரி 17ம் தேதிக்கு பிறகு, மக்களிடம் முடிவை கேட்டறிந்துவிட்டு, தனிக்கட்சி தொடங்க தீபா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications