தினகரன், சுகேஷ்.. நேருக்கு நேர் உட்கார வைத்து கிடுக்கிப் பிடி விசாரணைக்கு தயாராகும் டெல்லி போலீஸ்!
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட சுகேஷையும், டிடிவி தினகரனையும் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட சுகேஷையும், டிடிவி தினகரனையும் நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை, பொதுச் செயலாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணியினரிடம் தேர்தல் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இரட்டை இலையை எப்படியாவது பெற்று அதை சித்தியின் காலடியில் சேர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு மிக்கவர் என்று கூறிக் கொண்ட தரகர் சுகேஷ் என்பவருக்கு முன்பணமாக ரூ.1.30 கோடி பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

திடுக் தகவல்கள்
இதைத் தொடர்ந்து சுகேஷை டெல்லி போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில் டிடிவி தினகரனின் பெயரை கூறியது அல்லாமல் பல்வேறு திடுக் தகவல்களை வாக்குமூலமாக அளித்ததாகவும் தெரிகிறது.

4 ஆண்டு பழக்கம்
இதில் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், இரட்டை இலை சின்னம் பெற பெங்களூரில் சந்தித்து பேரம் நடத்தியதாகவும் அதற்கு கமிஷனாக ரூ.10 கோடியை சுகேஷ் கேட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணை வளையத்தில்
மேலும் இந்த விவகாரத்தில் தினகரனுக்கு சில வழக்கறிஞர்கள் தூது போயுள்ளதால், அவர்கள் அனைவரையும் விரைவில் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் தினகரனை நேரில் சந்தித்து சம்மன் கொடுப்பதற்காக டெல்லி போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

நேருக்கு நேர் விசாரணை
அவரிடம் சம்மன் வழங்கிய பிறகு அவரை டெல்லிக்கு அழைத்து சென்று சுகேஷுடன் ஒன்றாக வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது பல்வேறு உண்மைகள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications