சேகர் ரெட்டி போட்டு கொடுத்த அமைச்சர்கள் இவர்கள்தான்! 12 பேருக்கு தலைக்கு மேல கத்தி!
தம்முடைய கூட்டாளிகளாக செயல்பட்ட 12 அமைச்சர்களை வருமான வரித்துறையிடம் வசமாக போட்டு கொடுத்திருக்கிறார்.
சென்னை: போயஸுக்கு நெருக்கமான மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் கூட்டாளிகளாக செயல்பட்டதால் 12 அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறது வருமான வரித்துறை. இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கார்டன் கஜானாவை கைப்பிடிக்குள் வைத்திருந்தவர் சேகர் ரெட்டி. அவரிடம் பணம் பெற்ற வகையில் 12 அமைச்சர்கள் சிக்குகின்றனர் என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கார்டனுக்கு நெருக்கமானவர்களைக் கண்டறிந்து, ரெய்டு நடவடிக்கையில் இறங்கியது வருமான வரித்துறை.

சசி கோஷ்டி
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவருக்கு டெல்லி உத்தரவுகளைப் பிறப்பித்தது. சேகர் ரெட்டி வளைக்கப்பட்டதும், எடப்பாடி பழனிசாமி உள்பட சசிகலாவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டனர்.

ராமமோகன் ராவ்
"சேகர் ரெட்டியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் ராமமோகன ராவ். அதன்பிறகு, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் அனைத்தும் ரெட்டிக்கே வந்து சேர்ந்தது. 500 கோடி ரூபாய்க்கு மேல் எந்த ஒப்பந்தம் வந்தாலும் ரெட்டிதான் தலையிடுவார். 'பணத்தை எந்தெந்த வகைகளில் முதலீடு செய்வது?' என்பதைப் பற்றி சசிகலாவுக்கு ஆலோசனை கூறுவதும் ரெட்டிதான்.

சகலமும்...
தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், எதிராளிக்கு என்ன வேண்டுமோ அதைத் துல்லியமாக செய்து கொடுத்துவிடுவார் ரெட்டி. அதில் 'சகல' விஷயங்களும் அடங்கும்.

விஜய்பாஸ்கர்
பன்னீர்செல்வம், எடப்பாடிக்கு அடுத்தபடியாக ரெட்டியுடன் அதிக நெருக்கத்தில் இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அவருடைய நண்பர் பிரேம்குமாரும் ரெட்டியோடு சேர்ந்து கைது செய்யப்பட்டார். பணத்தை தங்கமாக மாற்றும் வித்தை தெரிந்தவர் பிரேம்குமார்.

12 அமைச்சர்கள்
இவர்களது கூட்டணியில் 12 அமைச்சர்கள் நிலங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். வேறு சிலர் எஸ்டேட்டுகளை வாங்கிக் குவித்தார்கள். பொதுப்பணித்துறை ஒப்பந்தம் நடக்கும் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் என அனைவருக்கும் கமிஷன் தொகைகளைக் கொடுத்து வந்தார் ரெட்டி. அதை வரவு-செலவு பட்டியலில் குறித்து வைத்திருந்தார். அதை வைத்துத்தான் 300 கோடி ரூபாய் கமிஷன் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். சேகர் ரெட்டி-ஆர்.கே.நகர் பண விநியோகம் ஆகிய இரண்டும் எடப்பாடி அரசுக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications