டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு... பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
சிவகங்கை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்
வெள்ளிகிழமை காரைக்குடி நகராட்சி, காரைக்குடி முத்துப்பட்டிணம் ஆரம்ப சுகாதார
மையம் மற்றும் இராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி ரோட்டரி இன்டராக்ட் சங்கம் இணைந்து
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
அதற்கு முத்துப்பட்டிணம் ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டர் திருமதி.அனிதா அவர்கள் தலைமை தங்கினார்கள். முன்னதாகபள்ளி தலையாசிரியர்திரு. ஆ.பீட்டர்ராஜாஅவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.

நீர் தேங்காமல் பாதுகாப்போம்
இந்நிகழ்ச்சியில் டாக்டர். அனிதா பேசுகையில், டெங்கு காய்ச்சல் உண்டு பண்ணக்கூடிய ஏடிஸ் வைரஸ்,கொசுக்கள் மூலம்தான் பரவுகிறது என்றார். இவ்வகை கொசு நன்னீரில் மட்டுமே உற்பத்தி ஆக கூடியது. எனவே வீட்டின் சுற்றுபுறத்திலும், பள்ளியின்சுற்றுபுறத்திலும் உள்ள மழைநீர் தேங்கும் அளவில் உள்ள பிளாஸ்டிக் டப்பாக்கள், பாட்டில் மூடிகள், பாலிதீன் பைகள்,கொட்டடாங்குச்சிகள்ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள்.

டெங்கு காய்ச்சல் கவனம்
மேலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளையும் விளக்கமாக கூறினார் இவ்வகை காய்ச்சலால் உடலில் இரத்தக்கசிவுஏற்பட்டுநமது உடலில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் என்றும், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், காய்ச்சல் குறைந்தாலும் 15நாட்களுக்குநாம் கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் உறுதிமொழி
சிலசமயம் இவ்வகை வைரஸ் உடலில் அழியாமல் இருந்து மேலும் டெங்கு காய்ச்சலை அதிகப்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள் அன்றைய தினமே டெங்கு காய்ச்சல் ஒழிப்பு உறுதிமொழியானது மாணவர்கள் அனைவராலும் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

ஆர்வமுடன் பங்கேற்பு
நிகழ்ச்சியில் இராமநாதன் செட்டியார் பள்ளியின் ரோட்டரி இன்டராக்ட்சங்கத்தின்தலைவர் செல்வன் ஆரோக்கிய கிறிஸ்டோபர், செயலர் கிலன் பொருளாளர் சண்முகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் சரவணன்அவர்கள்நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயகாந்தி அவர்கள் செய்திருந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications