சசிகலாவால் பறிபோன அதிமுக சின்னம்! அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்..
பொதுச்செயலாளர் தேர்வு நியாயமாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்களை அடுக்கியது ஓ.பி.எஸ் தரப்பு. இதனால்தான், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக அவசர கோலத்தில் அவர்கள் இஷ்டப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டதுதான் இரட்டை இலை முடக்கத்திற்கு காரணமாக போய்விட்டது.
அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி மறைந்ததை தொடர்ந்து, ஒரு வார காலத்திலேயே அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா எடுத்த முயற்சிகள் மக்களை முகம் சுளிக்க வைத்தன.
ஒவ்வொரு நிர்வாகிகளாக போயஸ் இல்லம் அழைத்துச் சென்று, "எங்கள் யாருக்குமே தகுதியில்லை, கட்சியை காக்க வந்த காவல் தெய்வம் நீங்கள்தான்.." என்ற ரேஞ்சில் பேச வைத்து பேட்டியை ஒளிபரப்ப வைத்து அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை.

பொதுச்செயலாளர்
இதில் பன்னீர்செல்வமும் கட்டாயப்படுத்தப்பட்டவரை போல சின்னம்மா வர வேண்டும் என ஒப்பித்துக்கொண்டிருந்தார். தம்பிதுரை போன்றோர் இதையே நாபி கமலத்திலிருந்து உச்சஸ்தாபியில் உரக்க கூறினர். அப்புறம் ஒரு சுபயோக சுப தினத்தில், பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் கூட்டிவைத்து, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

விதிமீறல்கள்
கட்சியில் இணைந்து 5 வருடங்கள் ஆகாத நிலையில் பொதுச்செயலாளராக ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற அதிமுகவின் விதிகளை அவர்களே காற்றில் பறக்கவிட்டு சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். ஏன் இவ்வளவு அப்பட்டமான விதிமீறல்? அத்தனையும் பதவி ஆசையன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

பேராசை
இந்த விதிமீறல்களுக்கு சப்பைகட்டு கட்ட, சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை, நியமிக்கப்பட்டார்.. அதுவும் தற்காலிகமாக என்றெல்லாம் வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால் பேராசை பெரு நஷ்டம் என்பதை போலத்தான், இப்போது அதிமுக நிலை ஆகிவிட்டது. சசிகலா நியமனத்தை கேள்வி எழுப்பிதான் தேர்தல் ஆணையத்திற்கு படையெடுத்தது ஓ.பி.எஸ் தரப்பு.

காரணம் இதுதான்
பொதுச்செயலாளர் தேர்வு நியாயமாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்களை அடுக்கியது ஓ.பி.எஸ் தரப்பு. இதனால்தான், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. தனி ஒருவரின் பதவி ஆசை எத்தனையோ கனவுகளுடன் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியை அதளபாதாலத்தில் தள்ளிவிட்டது. அந்த தனி ஒருவரின் முதல்வர் நாற்காலி ஆசைதான், இன்று அதிமுக இரண்டாக உடையவும் ஒரு காரணமாயிற்று.
-
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications