ஆட்கள் சேர்க்க முடியவில்லை... திணறும் தினகரன் பிரசாரம்.. ஒரு ரவுண்ட் அப்!
வென்றால் மட்டுமே ஆட்சியும் கட்சியும் நீடிக்க வாய்ப்புண்டு என்ற நிலையில் தானே களம் இறங்கியிருக்கும் தினகரன் ஆரம்பத்தில் இருந்தே கூட்டம் காட்ட முடியாமல் திணறுகிறார்.
தேர்தல் வேலைகளுக்காக அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், சென்னை எம்.எல்.ஏக்கள் என்று 153 பேரை நியமித்தார் தினகரன். அவர்களில் பாதி பேர் கூட பணி செய்ய முன்வரவில்லை.
பதவியைத் தக்க வைத்துக்கொள்ள அமைச்சர்கள் மட்டுமே திரண்டார்கள். மற்றவர்கள் பள்ளி மாணவர்கள் போல உடம்பு சரியில்லை சாக்கை சொல்லி ஒதுங்கி விட்டார்கள்.

பேசத் தெரியலை
பிரசாரத்தில் பேசுவதிலும் தினகரன் தடுமாறுகிறார். ‘நான் ஜெயித்தால் ஆர்கே நகரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன்' என்று சொல்ல ஷாக் ஆனார்கள் கட்சி நிர்வாகிகள். இப்போது ஜெயலலிதா பாணியில் ஸ்க்ரிப்டாக இல்லாமல் பாய்ண்ட் பாய்ண்டாக முன்கூட்டியே எடுத்து தரப்படுகிறது.

சசிகலாவை மறந்தாச்சு
பிரசாரம் துவங்கியதில் இருந்து இதுவரையிலும் ஒரு இடத்தில் கூட சின்னம்மா பெயரை உச்சரிக்கவில்லை. சசிகலாவின் பெயரோ படமோ எந்த பிரசாரத்திலும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

தியாகத் தலைவி
மூச்சுக்கு முன்னூறு முறை தியாகத் தலைவி என்று சொல்லும் அமைச்சர்களே சசிகலாவை நினைவுபடுத்த விரும்பவில்லை. தினகரன் பேசும்போது தனது பேச்சில் அதிகமாக ஹைலைட் செய்வது எம்ஜிஆரைத் தான்.

ஒப்புக்கு ஜெ. பெயர்
ஜெயலலிதாவைக் கூட ஒப்புக்கு சொல்லி ஓரிரு வார்த்தைகளில் நிறுத்திவிடுகிறார். ஜெயலலிதாவை இழுத்தால் அவரைக் கொன்றது யார் என்று மக்கள் மனதில் அலையடிக்கும். எதற்கு வேண்டாத வேலை என்று ஜெயலலிதாவையே இருட்டடிப்பு செய்கிறார் தினகரன்.

நின்று நடந்து மட்டுமே பேச்சு
சிறிது தூரம் திறந்த வேனில் போகிறார். சிறிது தூரம் நடந்து போகிறார். இவையெல்லாம் ஹைஜீனிக்கான இடங்களில் மட்டும் தான். சேரிப்பகுதி, அசுத்தமான காற்றுள்ள இடங்களில் எல்லாம் கார் கண்ணாடியைக் கூட இறக்க மறுக்கிறார். முதல் நாள் ஆர்வக் கோளாறில் நடந்தே போனதில் நிறைய உடல்நலக் குறைவு பிரச்னைகள் ஏற்பட்டதால் இப்போது ஏரியா பார்த்துதான் காலை வைக்கிறார்.

ஏனோ தானோ வேலை
தினகரன் பெரிதும் நம்பும் கட்சி நிர்வாகிகள் ஏனோ தானோ என்றுதான் வேலை செய்கிறார்கள். ஆள் இருந்தால் மட்டுமே வேலை நடக்கிறது தினகரன் அந்த பக்கம் நகர்ந்தால் ஓபி அடிக்கிறார்கள். கிட்டத்தட்ட தினகரன் வந்துவிடக்கூடாது என்ற மனநிலையில் தான் வேலை பார்க்கிறார்கள். இது தினகரனுக்கு தெரிகிறதா என்று கூட புரியவில்லை.

கலக்கத்தில்
மூன்று நாளைக்கு ஒருமுறை தொகுதி மக்களின் மனநிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பது உளவுத்துறைக்கு விடப்பட்ட உத்தரவு. இதுவரை வந்த ரிப்போர்ட் எதுவுமே தினகரனுக்கு ஆதரவாக இல்லை. எனவே கலக்கத்தில் தான் இருக்கிறது தினகரன் தரப்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications