ஒரு துரோகி இன்னொரு துரோகிக்கு பதவி கொடுத்துள்ளார்- தினகரன்
ஒரு துரோகி இன்னொரு துரோகிக்கு பதவி கொடுத்து தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். துரோகத்துடன் கை கோர்த்துள்ளார் துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறியுள்ளார் தினகரன்.
தமிழக சட்டசபை வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை முன்னவராக இருந்த செங்கோட்டையனுக்கு பதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையின் முன்னவராக நியமிக்கப்படுவதாக பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக இருந்தார். பின்னர் அதிமுக இருஅணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவை முன்னவராக செயல்பட்டு வந்தார். தற்போது அணிகள் இணைந்ததை தொடர்ந்து பன்னீர்செல்வம் மீண்டும் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆர்.கே. நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தார். முதல்வர் பதவியில் அமரவைத்த சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்.
அப்படிப்பட்டவர், கட்சி சின்னத்தையும், கொடியையும் முடக்கிய துரோகி ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார். செங்கோட்டையன் வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். அவரை நீக்கிவிட்டு மீண்டும் முன்னவராக ஓ.பன்னீர் செல்வத்தை நியமித்துள்ளார். இது பதவியை தக்க வைப்பதற்காக செய்யப்பட்ட செயல் என்று கூறினார் தினகரன்.
சசிகலா சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? துரோகியுடன் கைகோர்த்துள்ளார் துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications