குலசேகரத்தில் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படுமா? மனோ தங்கராஜ் கேள்வி
குலசேகரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைப்படுத்துவது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
பத்மநாபபுரம் : குலசேகரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சட்டசபை உறுப்பினர் மனோ தங்கராஜ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதிலளித்தார்.
தமிழக சட்டசபையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பத்மநாபபுரம் தொகுதி எம் எல் ஏ மனோதங்கராஜ், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அவர் பேசுகையில், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலசேகரம் தினசரி சந்தையில் அதிகமாக குப்பைக்கழிவுகள் சேருவதால் அப்பகுதியில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் எழுவதுடன் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பெரும் அசவுகரியம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை. குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கழிவுகளை ஒழிக்கும் வசதி அந்த பேரூராட்சிக்கு இல்லாததால், குப்பை கழிவுகளை குலசேகரம் தினசரி சந்தை பகுதியின் ஒரு புறத்தில் கொட்டி வருகின்றனர்.
இதனால் பெரும் சுகாதாரக்கேடு அப்பகுதி முழுவதும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுப்பதாக பேரூராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் கடந்த இரு வருடங்களாகக் கூறி வருகிறது. ஆனால் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எனவே இதற்கு தீர்க்கமான தீர்வு ஏற்படும் வகையில் திடக்கழிவு மேலாண்மைக்கான தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு தக்க இயந்திர வசதிகளும் செய்து கொடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இப்பிரச்சனை குறித்து துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications