கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்யுங்கள்- சாமளாபுரத்தில் போராட்டம்!- வீடியோ
திருப்பூர்: டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டபோது, ஈஸ்வரி என்ற பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சாமளாபுர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் சாமளாபுரத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அந்த ஊர்மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏடிஎஸ்பி பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். காவல்துறையின் அராஜகம் தமிழகம் முழுவதும் கடும் கண்டனத்துக்கு ஆளானது.

சாமளாபுரம் மக்கள், காவல்துறை வன்முறையைக் கண்டித்தும் ஈஸ்வரியை அறைந்ததைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினர். அப்போது ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என போராடினார்கள்.
மேலும் சாமளாபுரத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். செவித்திறன் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி கூறுகையில்,''டாஸ்மாக் கடை வேண்டாம் என்று தானே போராட்டம் நடத்தினோம். ஆனால் காவல்துறை எங்கள் மீது தடியடி நடத்தியது. என்னை அறைந்ததில் என் காது கேட்கவில்லை.
என்னை அறைந்த பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஆனால் ஒருபோதும் சாமளாபுரம் பேரூராட்சிக்குள் டாஸ்மாக் வரக் கூடாது. அதனால் இங்கு விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிர் இழந்தனர். ஆகையால் டாஸ்மாக்கை ஒருபோது நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என உறுதியாகக் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications