ஆபத்தான பகுதிகளில் மீன்பிடிப்பு... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் - வீடியோ
கேஆர்பி அணையிலிருந்து உபரி நீர் செல்லும் ஆபத்தான பகுதிகளில் மீன்பிடிப்பவர்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் ஒன்றும் செய்யவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பி உபரி நீர் செல்லும் மதகுகளில் ஆபத்தான இடங்களில் மீன்பிடிப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது கேஆர்பி அணை. கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இந்த அணை தற்போது முழுவதுமாக நிரம்பிவிட்டது. கேஆர்பி அணை கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் நீரில்லாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது நீர் நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதனையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால் 16 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால், அணையின் மதகுகளில் ஆபத்தான இடங்களில் சிலர் மீன்பிடித்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.