காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்.. இனிப்புகள் வழங்கி உற்சாகம்
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று தீபாவளி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையேற்றார்.

பட்டதாரி ஆசிரியர் கோமதிஜெயம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தலைமையாசிரியர் மாணவர்கள் , இத்திருநாளில் தீய எண்ணங்களை விடுத்து, நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு, வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்று வாழ்த்துக் கூறினார்.

மேலும் மாணவர்கள் இத்தீபாவளி திருநாளில் பட்டாசுகளை தவிர்த்து, மாசற்ற சுற்றுச்சுழலை உருவாக்க வேண்டும் என்றார். பட்டதாரி ஆசிரியர் அனுராதா தீபாவளி பண்டிகை கொண்டாடுவதன் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

இவ்விழாவையொட்டி பள்ளி மாணவர்கள் ,பள்ளி வளாகத்தில் SAVE ENVIRONMENT, NO CRACKERS என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வண்ணக்கோலமிட்டும், தீபங்கள் ஏற்றியும் மகிழ்ந்தனர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வாழ்த்து அட்டை வழங்கியும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி நன்றியுரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications