காவிரி,காஷ்மீர் சிறுமி விவகாரம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து வடகரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வடகரையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நெல்லை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெல்லை மாவட்டம் வடகரையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் மத்திய. மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஷரீப் தலைமை தாங்கினார்.

பேரூர் அவைத் தலைவர் அமானுல்லா, காங்கிரஸ் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் ஜாகீர் உசேன் , அ.ம.மு.க செயலாளர் காஜா செய்யது ஒலி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் செய்யது, காங்கிரஸ் நகர தலைவர் அபுபக்கர் சித்திக், முஸ்லீம் லீக் செயலாளர் இலியாஸ், தமுமுக தலைவர் துரை, பேரூர் திமுக துணைச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி கனியப்பா அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன குரலெழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்சி / எஸ்டி பழங்குடியினருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற கோரியும், காஷ்மீர் சிறுமியை படுகொலை செய்த நபர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் மாணவிகளை பாலியல் தொழில் செய்திட வற்புறுத்திய பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் அதற்கு துணையாக இருக்கும் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications