கனிமொழி பிறந்த நாளில் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்த திமுக மகளிரணி நிர்வாகிகள்
கனிமொழி பிறந்த நாளில் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர் திமுக மகளிரணி நிர்வாகிகள்.
Recommended Video
சென்னை: திமுக மகளிரணி செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழியின் பிறந்த நாளில் அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து அக்கட்சி பெண் நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி விடுதலையானது முதலே அவரது சிஐடி காலனி வீடு தினந்தோறும் திருவிழா கோலத்தில் காட்சி தருகிறது. கனிமொழியின் ஆதரவாளர்கள் நாள்தோறும் சிஐடி காலனி வீட்டுக்கு படையெடுப்பது வழக்கமாகிவிட்டது.
கனிமொழியின் அணியில் இணைவதில் திமுகவில் தற்போது ஓரம்கட்டப்பட்டிருப்பவர்கள் பலரும் ரொம்பவும் முனைப்பாகவே இருக்கின்றராம். இன்று கனிமொழியின் பிறந்த நாள் என்பதால் இந்த அதிருப்தியாளர்களின் வாழ்த்துகள்தான் அதிகம் கிடைத்ததாம்.
திமுக மகளிரணி நிர்வாகிகளும் கனிமொழி தலைமையில் திரள்வதில் முனைப்புடன் இருக்கின்றனர். இன்று காலையிலேயே கனிமொழியின் வீட்டு முன்பு மகளிரணியினர் திரண்டுவிட்டனர்.
இவர்களில் சிலர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்தும் வணங்கினர்.