ஏளனமாக பேசிவிட்டு தமிழகம் வருவதற்கு கூச்சமா இல்­லையா?- நிர்மலா சீதாராமனுக்கு முரசொலி கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்­நாட்­டைப் பற்றி ஏள­ன­மா­கப் பேசிவிட்டு எந்த முகத்தை வைத்­துக் கொண்டு தமிழ்­நாட்­டுக்கு வந்து கலந்­து­ரை­யா­டல் எல்­லாம் நடத்­து­கி­றீர்­கள்? கூச்­ச­மாக இல்­லையா? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் நாளேடான முரசொலி.

திமுகவின் முரசொலி நாளேட்டில் "நிதித்தனம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இன்றைய தலையங்கம்: வழக்­கம் போல தமிழ்­நாட்­டைப் பற்றி ஏள­ன­மா­கப் பேசி இருக்­கி­றார் ஒன்­றிய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன். அவர் அப்­படி பேச­வில்லை என்­றால்­தான் அதிர்ச்­சிக்­கு­ரி­ய­தாக இருக்­கும்.

சென்னையில் கலந்துரையாடல்

மத்திய அர­சின் 2025-–26 ஆண்­டுக்­கான நிதி­நிலை அறிக்கை குறித்த கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி சென்­னை­யில் நடந்­தது. இதில் கலந்து கொள்ள வந்­தி­ருந்­தார் மத்திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன். “மத்திய அரசு கடந்த பத்து ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டுக்கு பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொடுத்­துள்­ளது” என்று சொல்லி இருக்­கி­றார் நிதி அமைச்­சர்நிர்­மலா சீதா­ரா­மன். அப்­ப­டி­யா­னால் பத்து திட்­டங்­க­ளை­யா­வது வரி­சை­யா­கச்சொல்லி இருக்க வேண்­டும். அதைச் செய்­ய­வில்லை. அப்­படி இருந்­தால்­தானே சொல்லி இருப்­பார்.

வரைபடத்திலேயே தமிழ்நாடு இல்லையே

அவர் வெளி­யிட்ட நிதி­நிலை அறிக்­கை­க­ளில் தமிழ்­நாடு என்ற பெய­ரா­வது இருந்­ததா? எந்த மாநி­லத்­துக்­கா­வது தேர்­தல் வந்­தால் அந்த மாநி­லத்­துக்­காக கண்­து­டைப்பு திட்­டங்­களை அறி­விப்­பார்­கள். அவ்­வ­ள­வு­தான். இப்­போது மோடி நாற்­கா­லி­யைக் காப்­பாற்­றிக் கொண்­டி­ருக்­கும் இரண்டு பேர், ஆந்­திர சந்­தி­ர­பா­பு­வும், பீகார் நிதிஷ்­கு­மா­ரும். அத­னால் அவர்­களை மகிழ்­விக்க, அந்த மாநி­லத்­துக்­குத் திட்­டங்­களை அறி­வித்­தி­ருப்­பார்­கள். மற்­ற­படி வேறு மாநி­லங்­க­ளை­யும் கண்­டு­கொள்ள மாட்­டார்­கள். குறிப்­பாக தமிழ்­நாடு அவர்­க­ளது வரை­ப­டத்­தில் இருக்­காது. எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லத்­தின் பெய­ரைச் சொன்­னாலே பல் வலி வந்து விடும் என்று பயப்­­படக் கூடிய ஆட்­சி­தான் பா.ஜ.க. ஆட்சி.

நிர்மலா சீதாராமனின் அந்த ஏளன பேச்சு

“தமிழ்­நாட்­டில் வேறு ஒரு விவா­தம் நடந்து வரு­கி­றது. தமிழ்­நாடு ஒரு ரூபாய் கொடுத்­தால் திருப்பி 27 பைசா கூட வழங்­கப்­ப­ட­வில்லை என்ற வாதமே தவ­றா­கும். கொஞ்­சம் ஏள­ன­மா­கச் சொல்ல வேண்­டு­மா­னால், தமிழ்­நாட்­டிற்கு சென்­னை­யும் கோவை­யும்­தான் அதிக வரி கொடுக்­கி­றது. அரி­ய­லூர் மற்­றும் கோவில்­பட்­டி­யில் இருப்­ப­வர்­கள் எங்­க­ளுக்கு என்ன செய்­கி­றீர்­கள் என்று கேட்­டால், சென்­னை­யும் கோவை­யும், 'நாங்க தான் பணம் கொடுக்­கி­றோம். அத­னால் எங்­க­ளுக்கு பணம் திருப்பி கொடுங்க, அரி­ய­லூ­ரும் கோவில்­பட்­டி­யும் எக்­கேடு கெட்­டால் எங்­க­ளுக்கு என்ன?’ என்று கேட்­டால் எப்­படி இருக்­கும்?” என்று கேட்டு இருக்­கி­றார் நிர்­மலா சீதா­ரா­மன்.

தமிழக பட்ஜெட்டை படியுங்க

தமிழ்­நாடு அரசு ஒரு நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­கி­றது. அதனை எடுத்­துப் பாருங்­கள். 'அனை­வ­ருக்­கு­மான நிதி­நிலை அறிக்­கை­யாக’ அது அமைந்­தி­ருக்­கும். அனைத்­துப் பகு­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய நிதி நிலை அறிக்­கை­யாக அது அமைந்­தி­ருக்­கும். தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு அதி­க­மாக உத­வு­ப­வர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, யார் அடித்­தட்­டில் இருக்­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு உத­வு­வது மாதி­ரி­யான நிதி­நிலை அறிக்­கை­யாக தமிழ்­நாட்­டின் அறிக்கை இருக்­கும்.

தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை?

'எங்­க­ளுக்கு ஏன் தர­வில்லை’ என்­று­தான் நாங்­கள் கேட்­கி­றோமே தவிர, அவர்­க­.ளுக்கு ஏன் அதி­கம் தரு­கி­றீர்­கள்? என்று நாம் கேட்­க­வில்லை. தமிழ்­நாட்­டுக்கு தர வேண்­டிய அடிப்­படை நிதி­யைக் கூட தர மறுக்­கி­றீர்­களே என்­ப­து­தான் எங்­க­ளு­டைய வேதனை. பள்­ளிக் கல்­விக்­கான ரூ.2000 கோடி தர வேண்­டிய இடத்­தில் ரூ.1500 கோடியை கொடுத்­து­விட்­டால் கூட அது குறை­யா­கச் சொல்ல முடி­யாது. ஆனால் மொத்­த­மா­கத் தர­வில்லை. மத்திய பா.ஜ.க. அரசு. 'ஒன்­றிய அரசு தரா­விட்­டா­லும் நாம் அந்த நிதி­யைத் தரு­வோம்’ என்று சொல்லி இருக்­கி­றார் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

பேரிடர் நிதி

இயற்கை பேரி­ட­ருக்­காக ரூ.37 ஆயி­ரம் கோடி கேட்­டுள்­ளோம். அதில் பாதி­யைக் கொடுத்­தி­ருந்­தால் கூட அதைக் குறை­யா­கச் சொல்ல முடி­யாது. ஆனால் ஒரு விழுக்­காடு பணத்­தைக் கூடத் தர­வில்லை ஒன்­றிய பா.ஜ.க. அரசு. நிதி நெருக்­க­டி­யில் இருந்த போது தமிழ்­நாடு அரசு தன்­னு­டைய நிதி­யில் இருந்து நிவா­ரண உத­வி­க­ளை­யும் பணி­க­ளை­யும் மேற்­கொண்­டது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­னடி நிவா­ர­ண­மா­க­வும், உட்­கட்­ட­மைப்­பு­களை மறு­சீ­ர­மைக்­க­வும் தமிழ்­நாடு அரசு மாநி­லப் பேரி­டர் நிதி­யில் இருந்து இது­வரை 2,477 கோடி ரூபாய் செலவு செய்­துள்­ளது.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையில் 7 ஆண்டுகளும்

பத்து சிறப்­புத் திட்­டங்­களை அறி­வித்து, அதில் ஐந்தை நிறை­வேற்­றிக் காட்டி இருந்­தால் கூட மத்திய அர­சுக்கு நன்றி சொல்­ல­லாம். அறி­வித்­தது ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்­து­வ­மனை. அதை­யும் ஏழு ஆண்­டு­க­ளா­கக் கட்­ட­வில்லை.

16 லட்­சம் குடி­நீர் இணைப்­பு­களை தமிழ்­நாட்­டுக்கு மத்திய அரசு வழங்கி இருப்­ப­தா­கச் சொல்லி இருக்­கி­றார் நிர்­மலா. இதைத்­தான் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றார்­கள். குடி­நீர் இணைப்பு கொடுத்­தோம், வீடு கட்­டித் தந்­தோம் என்று. அதில் என்ன உண்மை?

வீடு, குடிநீர் திட்டம் உண்மைதானா?

*மத்திய அரசு வீடு­தோ­றும் குடி­நீர் (Jal Jeevan Mission) என்ற திட்­டத்தை வைத்­துள்­ளது. இத் திட்­டத்­தின் கீழ் வழங்க வேண்­டிய 4,142 கோடி ரூபா­யில், 732 கோடி ரூபாயை மட்­டுமே வழங்­கி­யுள்­ளது. நிதி­யின்­மை­யி­னால் திட்­டங்­க­ளின் செயல்­பாடு சுணங்­கக் கூடாது என்­ப­தால் தமிழ்­நாடு அரசு தனது நிதி­யைக் கொடுத்து இத்­திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது.

*மத்திய அர­சின் திட்­ட­மான பிர­த­மர் நகர்ப்­புர வீட்டு வச­தித் திட்­டத்­தின் (PMAY-U), கீழ் வழங்­கப்­ப­டும் மானி­யத் தொகை­யா­னது, 1.5 இலட்­சம் ரூபா­ யா­கவே இருக்­கி­றது. இத் திட்­டத்­தி­னைச் செயல்­ப­டுத்தி வரும் தமிழ்­நாடு அர­சா­னது, வீடு ஒன்­றிற்கு 12 முதல் 14 இலட்­சம் ரூபாயை தன் சொந்த நிதி­யின் மூலம் மானி­ய­மா­கக் கொடுத்து, ஏழ்மை நிலை­யில் இருக்­கும் மக்­க­ளின் சொந்த வீட்­டிற்­கான கன­வினை நிறை­வேற்­றி­யுள்­ளது.

*மத்திய அர­சின் பிர­த­மர் ஊரக வீட்டு வச­தித் திட்­டத்­தின் (PMAY-G) கீழ் வழங்­கப்­ப­டும் மானி­யத் தொகை­யா­னது, வீடு ஒன்­றிற்கு 0.72 இலட்­சம் ரூபா­யாக, எட்டு வரு­டங்­க­ளுக்­கும் மேலாக இருந்து வரு­கி­றது. ஆனால் தமிழ்­நாடுஅரசு, வீடு ஒன்­றிற்கு 1.72 இலட்­சம் ரூபாயை மானி­ய­மாக வழங்கி வரு­கி­றது. நமது அரசு செயல்­ப­டுத்தி வரும் 'கலை­ஞர் கனவு இல்­லம்’ திட்­டத்­தின் கீழ், மாநில அர­சின் மானி­ய­மா­னது 3.53 இலட்­சம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­­படு­கி­றது. இது, ஒன்­றிய அரசு தன்­னு­டைய திட்­டத்­திற்கு வழங்­கும் மானி­யத்­து­டன்ஒப்­பி­டு­கை­யில் ஐந்து மடங்கு அதி­கம்.

தமிழ்நாட்டுக்கு வருவதற்கு கூச்சமே இல்லையா

மத்திய அரசு தன்­னு­டைய திட்­டங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் நிதி­யினை தமிழ்­நாடு அர­சின் மீது திணிப்­ப­தால், மாநில அர­சின் முன்­னு­ரி­மைத் திட்­டங்­க­ளுக்­குப் போதிய நிதி­ய­ளிப்பு இல்­லா­மல் போகி­றது. இது­தான் தமிழ்­நாட்­டுக்கு ஒன்­றிய அரசு வழங்­கும் நிதி நிலைமை ஆகும். நிதி அமைச்­சர் பத­வி­யில் இருப்­ப­வ­ருக்கு நிதித்­த­ன­மா­கப் பேச வேண்­டும். அவ­ருக்கு அது தெரி­யாது. ஏள­ன­மா­கத்­தான் பேசத் தெரி­யும். கிண்­டல் கேலி­தான் தெரி­யும். அத­னால்­தான் அவரை நிதி அமைச்­ச­ராக வைத்­தி­ருக்­கி­றார் மோடி. எந்த முகத்தை வைத்­துக் கொண்டு தமிழ்­நாட்­டுக்கு வந்து கலந்­து­ரை­யா­டல் எல்­லாம் நடத்­து­கி­றீர்­கள்? கூச்­ச­மாக இல்­லையா? இவ்வாறு முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+