தேர்தல்: தென்காசியில் மகள் சங்கீதாவை களம் இறக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி?

தொகுதி சீரமைப்பில் தற்போது தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் என்று ஆறு தொகுதிகள் உள்ளது.
இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருவில்லிப்புத்தூர் என்ற மூன்று தொகுதிகளும் தனித் தொகுதிகள். இந்த ஆறு தொகுதிகளிலுமே அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தனித் தொகுதியான தென்காசியில், தலித் 23 சதவீதமும், தேவர் 17 சதவீதமும், நாடார் 12 சதவீதமும் உள்ளனனர். மேலும், தென்காசி, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் அதிக அளவில் உள்ளது. கிறிஸ்தவ வாக்குகள் பரவலாக உள்ளது.
திமுக கூட்டணியில் தென்காசி தொகுதி எங்களுக்குத் தான் வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி பிடிவாதம் பிடித்து வருகின்றது. மேலும், தேர்தல் வேலைகளில் பரபரப்பு காட்டி வருகின்றனர். கூட்டணி உடன்பாடு அறிவிக்கப்படும் முன்பே புதிய தமிழகம் சார்பில் அங்கு தேர்தல் வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி 1.40 லட்சம் வாக்குகள் பெற்றார். அடுத்து 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. வுடன் இணைந்து 1.86 லட்சம் வாக்குகள் பெற்றார். மேலும், 2004ம் ஆண்டு தேர்தலின் போது 1.11 லட்சம் வாக்குகள் பெற்றார். இறுதியாக கடந்த தேர்தலிலும் 1.16 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த முறை திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இருப்பதால், தென்காசி தொகுதியில் எளிதாக வெற்றி பெறலாம் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர் புதிய தமிழகம் கட்சி முன்னணி நிர்வாகிகள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தென்காசி தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. கடந்த டிசம்பர் 15ம் தேதி தென்காசியில் கட்சியின் 17வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொது மக்கள் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.
மேலும், காலியாக உள்ள சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று போராட்டமும் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையில் தான் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு பதில் தனது மகள் டாக்டர் சங்கீதாவை தென்காசி தொகுதியில் களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதியவர்களுக்கும், கட்சியில் உள்ள முன்னணி நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் முக்கிய தருணங்களில் கட்சி தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாற்று முகாமிற்கு தாவிவிடுவதாகவும் அதனால் இம்முறை வெளியாட்களுக்கு சீட் இல்லை என்றும், தனது மகளை களம் இறக்க டாக்டர் கிருஷ்ணசாமி முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்த தகவலை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சிலரும் உறுதி செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications