தூத்துக்குடி கடலில் கஞ்சா மூட்டைகள்.. கடத்த முயற்சியா என போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடியை சேர்ந்த தாளமுத்துநகர் பகுதியில் நேற்று கடலில் ஐந்து மூட்டைகள் மிதந்து வந்தன. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது.
அதன் மொத்த எடை 220 கிலோவாகும். கடலில் கஞ்சா மூட்டைகள் பிடிபட்டதால் அவை இலங்கைக்கு கடத்த முயன்ற மூட்டைகளா என்பது குறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications