ஆம்பூர் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் 2 பேர் பரிதாப பலி
ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிநேரத்தில் மருத்துவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே கார் விபத்தில் சிக்கியதில் படுகாயங்களுடன் ராஜ்குமார் என்பவரும், நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்காக 13 வயது சிறுமி ஒருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் சிறுமி உள்பட இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக காத்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் மருத்துவமனை கேட்டை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications