நெருங்கும் கடைசி நாள்... திணறும் இ சேவை மையங்கள் - தவிக்கும் மாணவர்கள்
நெல்லை: சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெற கடைசி நாள் நெருங்குவதால் மாணவர்கள் முற்றுகை காரணமாக இ சேவை மையங்கள் திணறி வருகின்றன.
தமிழகம் முழுவதும் வருவாய் துறையில் இ சேவை மையங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு இ கவர்னர்ஸ் முகமையின் கட்டுபாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திடடத்தின் மூலம் ஜாதி, வருமானம், இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று, சமூக நலத்துறையின் திருணம உதவி தொகை திட்ட சான்றிதழ் உள்பட அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் முதன் முதலில் ராதாபுரம் தாலுகாவில் செயலபடுத்தப்பட்ட இந்த திடடம் பினபு அனைத்து தாலுகாவிலும் விரிவுப்படுத்தப்பட்டது. இதையடுத்து நெ்ல்லை மாவட்டத்தில் உள்ள 190 இ சேவை மையங்கள் மூலமே முக்கிய சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினரில் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் பிற்பட்ட மாணவ. மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 25ம் தேதி கடைசி நாள் எனவும், 9 முதல் 10ம் வகுப்புகளு்க்கு ஜூலை 30 கடைசி நாள் என்றும அதற்குள் விண்ணப்பிக்குமாறு பிற்பட்டோர் நலத்துறை அறிவித்துள்ளது.
இந்த மாணவர்கள் வருவாய் துறையில் இருநது பெறப்பட்ட வருமான சான்றிதழை இணைக்க வேண்டும். இதற்காக இந்த மாணவர்கள் இ சேவை மையங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால் கிராமங்களில் செயல்பட்டு வரும் பெரும்பாலான இ சேவை மையங்களில் நாள் ஓன்றுக்கு 10 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் சர்வரில் பழுது ஏற்படுவதால் பல சேவை மையங்கள் முடங்கி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications