தேவர் சிலைக்கு ஜெ. கொடுத்த தங்க கவசத்தையும் தேர்தல் ஆணையமே வச்சுக்குமோ?
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை அதிமுகவினரிடம் ஒப்படைக்க பேங்க் ஆப் இந்தியா மறுத்துள்ளது.
சென்னை: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த தங்க கவசம் யாருக்கு சொந்தம், அதிமுகவை முடக்கியது போல இந்த கவசத்தையும் தேர்தல் ஆணையமே வைத்துக் கொள்ளுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார். இந்த தங்க கவசம் தற்போது பேங்க் ஆப் இந்தியாவின் பாதுகாப்பில் உள்ளது.

இந்த ஆண்டு வரும் 30-ந் தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி தேவர் சிலைக்கு அணிவிக்க தங்க கவசத்தை பெறுவதற்கு பேங்க் ஆப் இந்தியாவுக்கு அதிமுகவினர் சென்றுள்ளனர்.
ஆனால் வங்கி அதிகாரிகளோ, அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எந்த அணியிடமும் ஜெயலலிதா அணிவித்த தங்க கவசத்தை தர இயலாது என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் தொடர்ந்து வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இதனடிப்படையில் ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தையும் கூட தேர்தல் ஆணையமே தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமோ என்கிற சந்தேகத்தை சிலர் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications