ஆட்சியையும், கட்சியையும் தக்க வைத்துக் கொள்ள புதிய வியூகங்களை வகுக்கும் எடப்பாடி பழனிச்சாமி
தற்போது உள்ள ஆட்சியையும், கட்சியையும் தக்க வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய வியூகத்தை வகுக்கவுள்ளார்.
சென்னை: தினகரனின் ஆதரவாளர்களை சமாளிப்பது குறித்து அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. சசிகலா சிறைக்கு சென்றவுடன் அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற இரு அணிகளும் ஒன்றிணைவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதற்கு இடையூறாக உள்ள டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இரு அணிகளும் இணைவதற்கு ஆக.5 வரை தினகரனால் கெடு விதிக்கப்பட்டது.

கெடு முடிந்தது
இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கெடு முடிவடைந்ததால் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளையும் அவர் அறிவித்தார். இதை ஒரு சிலர் ஏற்றனர் மற்றும் சிலர் மறுத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் அதிமுக தலைமை கழகத்துக்கு வருவதாக டிடிவி தினகரன் அறிவித்தவுடன் அங்கு அவரை வர விடாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தான் துணை பொதுச் செயலாளர் என்பதால் கட்சி அலுவலகத்துக்குள் நுழைவதை யாரும் தடுக்க முடியாது என்று தினகரன் கொக்கரித்துள்ளார்.

ஆட்சிக்கு பங்கம் ஏற்படாது
இந்த நிலையில் கட்சி பதவி போகும், ஆட்சி போகும் என்று அறைகூவல் விடுத்து வரும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களால் ஆட்சிக்கு எந்த வித பங்கமும் வராது என்பது எடப்பாடி நன்றாக தெரியும். ஏனெனில் பதவியை தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்களால் தூக்கி எறியமுடியாது. அதே சமயம் கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வசம் இருப்பதால், தினகரன் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே, கட்சியிலும், ஆட்சியிலும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்கும் வகையில் புதிய வியூகம் வகுப்பது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தினகரன் சம்மந்தமாக ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை












Click it and Unblock the Notifications