ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு தர ஆளுக்கு ரூ. 20 கோடி பேரம் பேசுறாங்க - செந்தில்பாலாஜி புகார்
ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு தர தலா 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video

குடகு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தமிழக போலீஸ் மிரட்டுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தர ஒரு எம்எல்ஏவிற்கு தலா ரூ. 20 கோடி வரை பேரம் பேசுவதாகவும் செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்கள் குடகில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது திமுக.
எடப்பாடி தரப்புக்கு மேலும் நெருக்கடி தரும் வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

குடகு ரிசார்ட்டில் போலீஸ்
திடீரென தமிழக போலீசார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் கர்நாடகாவின் குடகு ரிசார்ட்டுக்கு நேற்று சென்றனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்காவிட்டால் வழக்கு பாயும் என மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் பழனியப்பனை கைது செய்ய தேடிச்சென்றுள்ளனர் போலீசார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் போலீசாரின் இந்த மிரட்டலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சைலண்ட் ஆன எம்எல்ஏக்கள்
புதுச்சேரியில் இருந்தவரை செய்தியாளர்களை கூப்பிட்டு பேட்டி கொடுத்த எம்எல்ஏக்கள், குடகுக்கு சென்று 6 நாட்களாக யாரையும் சந்திக்கவில்லை. செல்போன் மூலமும் பேசவில்லை. யாருக்கும் பேட்டியும் தரவில்லை.

ரூ. 20 கோடி பேரம்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக காவல்துறையினர் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தருவதற்கு ரூ. 20 கோடி பேரம் பேசப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

குடகு போலீசில் புகார்
தமிழக போலீசாரின் மிரட்டலை அடுத்து கர்நாடகா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறுவதற்காகவும், ஆதரவு தரவேண்டும் என்பதற்காகவும் ரூபாய் 10 கோடி பேரம் பேசியதாக எம்எல்ஏ சண்முகநாதன் குற்றம் சாட்டினார். இப்போது செந்தில் பாலாஜி ரூ.20 கோடி புகார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications