சென்னை குண்டு வெடிப்பு - வெடிபொருள் நெல்லையில் இருந்து சென்றதா?
நெல்லை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கான வெடிபொருள், நெல்லையில் இருந்து சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ம் தேதி பெங்களுரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் பலியானார். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடித்த ரயிலில் போலீசார் நடத்திய விசாரணையில் அமோனியம் நைட்ரேட், பால்ரஸ் குண்டுகள், ஆணி மூலம் குண்டுகள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
குண்டு வெடிப்பின் பின்னனி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் குண்டு வெடிப்பு சமபவத்திலும் இதே போன்று தான் தடயங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஜூலை 27ம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 18 கிலோ நவீன ரக வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் இவை பெங்களூரில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த குணடுவெடிப்பில் பயன்படுத்தியதில் எஞ்சியவை என்பது தெரிய வந்தது. இந்த வெடிமருந்துகளை நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கல்குவாரியில் இருந்து வாங்கியுள்ளனர்.
இதையடுத்து வெடிமருந்தை சப்ளை செய்ததாக வீரவநல்லூரை சேர்ந்த பிரகாஷ் கல்லிடைக்குறிச்சி ஜான் ஆசிர், மற்றும் பதுக்கி வைத்திருந்த கிச்சான் புகாரி, அவருக்கு உதவியாக செயல்பட்ட பறவை பாதுஷா, அன்வர்பிஸ்மி, முகமது சம்சுதீன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்டது போக மேலும் 50 கிலோ வெடிமருந்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் அப்போதே செய்தி கசிந்தது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட அமோனியம் நைட்ரேட் தென்மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இதில் யார், யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications