தீபா வீட்டுக்குள் நுழைந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி போலீசில் சரண்- நாடகமாடியது ஏன்? பரபர வாக்குமூலம்
தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி ஐடி அதிகாரி மித்தேஷ்குமார் போலீசில் சரணடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படும் போலி வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ்குமார் என்ற பிரபாகரன் போலீசில் சரணடைந்துள்ளார். தீபா கணவர் மாதவனின் யோசனைப்படியே தாம் போலி அதிகாரியாக நடித்ததாக பிரபாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தீபாவின் தியாகராய நகர் வீட்டுக்குள் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரி என்ற பெயரில் ஒருவர் உள்ளே நுழைந்தார். தம்மை மித்தேஷ்குமார் என கூறிக் கொண்ட அந்த நபர் சர்ச் வாரண்ட் ஒன்றையும் தீபா வீட்டில் காண்பித்தார்.

இது குறித்து சந்தேகமடைந்த தீபா வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மித்தேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தீபா வீட்டின் சுவர் ஏறி குதித்து மித்தேஷ்குமார் தப்பி ஓடினார்.
அவரை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்தனர். இந்த நிலையில் போலி அதிகாரி மித்தேஷ்குமார் சென்னை போலீசில் சரணடைந்துள்ளார். அவர் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், புதுவையை சேர்ந்த தாம் உணவகம் நடத்தி வருகிறேன். தீபா கணவர் மாதவன் உணவகத்துக்கு வந்த போது சினிமா எடுக்க இருப்பதாக கூறினார்.
அந்த சினிமாவில் தமக்கும் வாய்ப்பு தருகிறேன் எனவும் மாதவன் உறுதியளித்தார். மாதவன் கூறியதன் அடிப்படையில் தாம் போலி வருமான வரித்துறை அதிகாரியாக தீபா வீட்டுக்குள் நுழைந்தேன் என் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து தீபாவின் கணவர் மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் மாதவன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications