5 தமிழக மீனவர்கள் வருவதில் தாமதம்: காத்திருக்கும் உறவினர்கள் அப்செட்!
திருச்சி: தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இலங்கையில் இருந்து தமிழகம் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் உறவினர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜக்சே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதையடுத்து, இன்று காலை 8.30 மணிக்கு அவர்கள் அனைவரும் திருச்சிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

அதனால், அவர்களை வரவேற்க ராமேஸ்வரத்திலிருந்து எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், பிரசாந்த் உள்ளிட்டோரின் உறவினர்கள், மனைவிகள், குழந்தைகள் இன்று அதிகாலை முதலே திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அவர்களுடன் பா.ஜ.க. மாநில செயலாளர் சுப்பிரமணியன், மனித நேய மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா என முக்கிய பிரமுகர்கள் தங்கள் கட்சி தொண்டர்களுடன் குவிந்திருந்தனர்.
இதனிடையே பாஸ்போர்ட் தொடர்பான பணிகள் எல்லாம் முறைப்படி முடிவடைந்து 5 மீனவர்களும் இன்று மதியம் 3 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது மீனவர்கள் அனைவரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியை மீனவர்கள் 5 பேரும் இன்று மாலையில் சந்திக்கின்றனர். இதனையடுத்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என கூறப்பட்டது. இதனையடுத்து திருச்சி விமானநிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர். எப்படியும் இன்று வந்துவிடுவதாக தெரிவித்த காரணத்தால் விடிய விடிய தூங்காமல் காத்திருந்து அதிகாலையில் திருச்சி வந்ததாகவும், தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications