போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து பயிர் காப்பீடு கேட்டு விவசாயிகளும் போராட முடிவு
போக்குவரத்து ஊழியர்களை போல தீவிர போராட்டத்தில் குதிக்க நாகை மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நாகை : நீண்ட நாட்களாக பயிர் காப்பீடு கேட்டும் அரசு அதற்கு செவி சாய்க்காததாலும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாலும் தீவிர போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏழாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்த போராட்டத்தால் தமிழக அரசுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பலர் பயிர்காப்பீடு கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து விவசாயிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பல கிராமங்களில் கூட்டுறவு வங்கிகளின் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் துண்டு ஏந்தி பிச்சை எடுத்தும் , மண் சட்டி ஏந்தியும், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியும் விவசாயிகளின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே வேதாரண்யம் தாசில்தார் விஜயகுமார் விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து உள்ளது. இதனையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற 12-ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications