போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து பயிர் காப்பீடு கேட்டு விவசாயிகளும் போராட முடிவு
போக்குவரத்து ஊழியர்களை போல தீவிர போராட்டத்தில் குதிக்க நாகை மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நாகை : நீண்ட நாட்களாக பயிர் காப்பீடு கேட்டும் அரசு அதற்கு செவி சாய்க்காததாலும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாலும் தீவிர போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏழாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்த போராட்டத்தால் தமிழக அரசுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பலர் பயிர்காப்பீடு கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களை தொடர்ந்து விவசாயிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பல கிராமங்களில் கூட்டுறவு வங்கிகளின் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் துண்டு ஏந்தி பிச்சை எடுத்தும் , மண் சட்டி ஏந்தியும், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியும் விவசாயிகளின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே வேதாரண்யம் தாசில்தார் விஜயகுமார் விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து உள்ளது. இதனையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற 12-ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications