நியமன பொதுச்செயலாளரை நீக்க கூடிய முதல் பொதுக்குழு!
நியமன பொதுச் செயலாளரை நீக்குவதற்காக முதல் முறையாக கூடியது இன்றைய அதிமுக பொதுக் குழு.
சென்னை: நியமன பொதுச் செயலாளரை நீக்குவதற்காக கூடிய முதல் அதிமுக பொதுக்குழு இன்று கூடிய பொதுக்குழுவாகும்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்றி கொள்ள மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்தி வந்தார் சசிகலா. வேண்டாம் வேண்டாம் என்று கூறியே பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்றுக் கொள்ள இருந்த வேளையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு உறுதியானதால் முதல்வர் பதவியை ஏற்க முடியாமல் சிறை சென்றார் சசிகலா.

பாதுகாப்பு உணர்வு
4 ஆண்டுகளில் கட்சி நம் கையை விட்டு போய்விடுமோ என்ற சந்தேகமடைந்த சசிகலா, தனது அக்காள் மகன் டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்து விட்டு சென்றார். அன்று முதல் ஆட்சியிலும் , கட்சியிலும் தினகரனின் தலையீடு அதிகரிக்க ஆரம்பித்தது.

கடுப்படைந்த நிர்வாகிகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மீறும் அளவுக்கு தினகரனின் தலையீடு இருந்ததால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒரு கட்டத்தில் தினகரனை கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தடுத்த நகர்வுகளால் கோபமடைந்த தினகரன் தன் பதவியின் கெத்தை காண்பிக்க சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த எடப்பாடியையே நீக்கினார்.

எத்தனை களேபரங்கள்
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை தினகரன் நீக்குவது, அவர் ஆதரவாளர்களை அப்பதவிகளுக்கு நியமிப்பது உள்ளிட்ட வேலைகளில் இறங்கினார். இதனால் பொறுத்தது போதும் என நினைத்த எடப்பாடி அணியினர் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி துணை பொதுச் செயலாளரின் நியமனமே கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவரால் செய்யப்பட்ட நியமனங்கள் ஏதும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இன்று பொதுக் குழு
இந்நிலையில் சசிகலா, தினகரனை நீக்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்களை நிறைவேற்ற அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினரின் பொதுக் குழு கூட்டம் இன்று கூடியது. எதிர்பார்த்தபடியே இருவரையும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர்.

முதல் முறையாக...
பொதுவாக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றமும் மட்டுமே பொதுக் குழு கூடுவது வழக்கம். ஆனால் இன்று எடப்பாடியால் கூட்டப்பட்ட பொதுக் குழுவில் முதல் முறையாக நியமன பொதுச் செயலாளரை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றியுளளனர்
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை












Click it and Unblock the Notifications