இன்றோடு முடியும் மீன்பிடித் தடைக் காலம்.. கடலுக்கு செல்ல தயாராகும் தூத்துக்குடி மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடியும் நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
தூத்துக்குடி: மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்டிருந்த தடைக் காலம் முடிவுக்கு வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
வங்காள வளைகுடா பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் தடை விதிக்கப்படும். இந்த 45 நாட்களை அரசு 61 நாட்களாக அதிகரித்து அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி அமலுக்கு வந்த தடை காலம் இன்றுடன் முடிகிறது. இந்தத் தடை காலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பழுது பார்த்தனர்.
இந்தத் தடை காலத்தில் அரசு மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறது. இந்த நிவாரணத் தொகை அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்படவில்லை. இதற்கிடையே பராமரிப்பு பணிகள் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இன்றுடன் தடை காலம் முடிவதால் நாளை காலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல உள்ளனர். இதற்கு வசதியாக மீனவர்கள் கடலில் விசைப்படகுகளை இறக்கி சோதனை ஓட்டத்தை நடத்தினர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடலுக்கு செல்ல இருப்பதால் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications